×

2 பள்ளி மாணவிகள் பலாத்காரம்: போக்சோவில் ஹெச்.எம் கைது


கேந்திரபாரா: இரண்டு பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் ராஜ்நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் (45), கடந்த சில தினங்களுக்கு முன் 7ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை தனது அறைக்கு அழைத்து, அவர்களை அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீட்டிற்கு வந்த மாணவிகள் இருவரும், மீண்டும் பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், ‘பள்ளிக்கு ஏன் செல்லவில்லை?’ என்று தங்களது மகள்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவிகள், பெற்றோர்களிடம் தெரிவித்தினர். அதையடுத்து மாணவிகளின் பெற்றோர் ராஜ்நகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியரை கைது செய்தனர். அவர் மீது ஐபிசி பிரிவுகள் 376, 354, 506 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராஜ்நகர் காவல் நிலைய ஆய்வாளர் அஜய் குமார் ஜெனா தெரிவித்தார்.

The post 2 பள்ளி மாணவிகள் பலாத்காரம்: போக்சோவில் ஹெச்.எம் கைது appeared first on Dinakaran.

Tags : H. M. ,Kandrapara ,Rajnagar ,Kandrapara district ,Odisha ,H. M ,
× RELATED மாணவியரை கட்டாயப்படுத்தி போதையில் ஆட்டம் போட்ட ஹெச்.எம் சஸ்பெண்ட்