×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி சாமி தரிசனம்; கோயில் யானை ஆண்டாளிடம் ஆசிர்வாதம் பெற்றார்..!!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். பிரதமர் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து வருகிறார். ரங்கா ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். ரங்கநாதர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள் யானைக்கு உணவளித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி 11 – 12.30 மணி வரை சாமி தரிசனம் செய்தார். கருடாழ்வார், மூலவர், தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்ட ராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார்.

கோயில் வளாகம் முழுவதும் நடந்து சென்று பிரதமர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் யானை மவுத் ஆர்கன் கருவியை வாசித்ததை பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கம்பராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி கேட்கிறார். ரங்கநாதர் கோயில் மண்டபத்தில் கம்பராமாயண பாராயணத்தில் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார். தமிழறிஞர்கள் பாடிவரும் கம்பராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி மனமுருக கேட்டு வருகிறார். பாதுகாப்பு வளையத்திற்குள் ஸ்ரீரங்கம் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி சாமி தரிசனம்; கோயில் யானை ஆண்டாளிடம் ஆசிர்வாதம் பெற்றார்..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Sami Daryanam ,Srirangam Ranganathar Temple ,Narendra Modi ,Sami ,Ranga Ranga Tower ,Sami Darisanam ,
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்...