×

சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்: இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் நாளை நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் இந்த மாநாடு துவங்குகிறது.

இந்த நிலையில் ,சேலம் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் செல்கின்றனர். மாலை 5 மணிக்கு, சேலம் விமான நிலையம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெற உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்: இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Salem district ,Chief Minister ,M.K.Stalin ,Salem ,CHENNAI ,2nd state convention ,DMK ,Petha Nayakkanpalayam ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...