- பிரதமர் மோடி
- சென்னை
- சாமி
- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
- மோடி
- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
- திரிஷி
- இராமேஸ்வரம்
- தமிழ்
- தமிழ்நாடு
சென்னை: சென்னையில் இருந்து பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டார். திருச்சி செல்லும் பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். சாமி தரிசனம் செய்த பிறகு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக நேற்று வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தார். பின்னர் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். இதையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். அங்கே அவரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் செல்லும் மோடிக்காக யாத்ரிநிவாஸ் எதிரே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பஞ்சக்கரை சாலை வழியாக காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்கிறார். பிரதமர் மோடி காலை 11 மணியிலிருந்து 12.40 மணி வரை சுவாமி தரிசனம் செய்வார் என்று தெரிவிப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், பிற்பகல் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி, கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. யாத்ரி நிவாஸ் முதல் ஸ்ரீரங்கம் கோயில் வரை 5 அடுக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார் appeared first on Dinakaran.