×

சீர்காழியில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள்

 

சீர்காழி,ஜன.20: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒன்றிய அரசின் சென்னை எம்எஸ்எம்இ, டிஎப்ஒ அலுவலகம் மற்றும் அஞ்சலி சமூக சேவை தொண்டு நிறுவனம், இணைந்து நடத்திய மகளிருக்கான ஆறு வார கால இலவச தையல் பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் சீர்காழி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு ஆறு வார கால தையல் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அஞ்சலி சமூக சேவை தொண்டு நிறுவன தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் சரோஜா கருணாநிதி நன்றி கூறினார்.

The post சீர்காழியில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Union Government Chennai MSME ,DFO ,Anjali Social Service Charitable Organization ,Sirkazhi, Mayiladuthurai district ,Sirkazi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்