×

மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக காவல் வாகனங்கள் 29ம் தேதி ஏலம்

திருவள்ளூர், ஜன. 20: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி பா.சிபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்கு சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் 14 மற்றும் நான்கு சக்கரவாகனங்கள் 6 என மொத்தம் 20 வாகனங்கள் வருகின்ற 29ம் தேதி காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப் படை மைதானத்தின் அருகே ஏலம் விடப்பட உள்ளன. வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முன் வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ₹1000, 4 சக்கர வாகனத்திற்கு ₹5,000 செலுத்த வேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கரவாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 சதவிகிதம் நான்கு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 18 சதவிகிதம் உடனடியாக செலுத்திவிட வேண்டும்.

வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே வாகனத்தின் பொது ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு, அரசால் அங்கிகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வரவேண்டும். மேலும் ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக காவல் வாகனங்கள் 29ம் தேதி ஏலம் appeared first on Dinakaran.

Tags : District Police SP Office police ,Tiruvallur ,Thiruvallur District Police SP Pa ,Sibas Kalyan ,Tiruvallur District Police Department ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...