×

தாயை பற்றி இழிவாக பேசியதால் ரவுடியை தீர்த்துக்கட்டிய சகோதரர்கள் பரபரப்பு தகவல்கள்

புதுச்சேரி, ஜன. 20: புதுவை ரெட்டியார்பாளையத்தில் நடந்த ரவுடி கொலையில் நடனக்குழு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயைப் பற்றி இழிவாக பேசியதால் ரவுடியை, தீர்த்துக் கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் புது நகரை சேர்ந்தவர் அமீர்கான் (26), ஷாருக்கான் (25). சகோதரர்களான இவர்கள் நடத்தி வந்த நடன குழுவில் இருந்த தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த வெற்றி (25) சமீபகாலமாக வரவில்லை. ஏன்? வருவதில்லை என கேட்டு, வீட்டுக்கு வெற்றியை அழைத்துள்ளனர். வெற்றி தனது நண்பரான திலாசுபேட், நடுத்தெருவில் வசிக்கும் ரவுடி கிஷோர்(27) என்பவருடன் சென்றுள்ளார்.

பேச்சுவார்த்தையில் ஆத்திரமடைந்த அமீர்கான், ஷாருக்கான் தரப்பினர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கிஷோரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பி ஓடிய கிஷோரை சரமாரி தலையில் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே கிஷோர் உயிரிழந்தார். தகவலறிந்த வடக்கு எஸ்பி பக்தவச்சலம் தலைமையில் போலீசார், அமீர்கான் மற்றும் ஷாரூக்கான் ஆகியோரை தனிப்படை அமைத்து தேடினர். இதனிடையே நேற்று இருவரும் தனிப்படை வசம் சிக்கினர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக் தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திலாசுபேட்டையைச் சேர்ந்த கிஷோர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இவரது நண்பர்களாக தட்சிணாமூர்த்தி நகர் வெற்றி நாராயணன், புதுநகர் அமீர்கான், ஷாருக்கான், ஸ்டீபன், ராகுல், ஜகதீஷ் ஆகியோர் இருந்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பு கிஷோருக்கும், அமீர்கான் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. அதன்பிறகு வெற்றி நாராயணன் வெளியூர் சென்றுவிட்ட நிலையில், பொங்கலுக்கு புதுச்சேரி வந்துள்ளார். அப்போது தனது பைக்கை ஜகதீசுக்கு கொடுக்கவே, அதை தங்களுக்கு வேண்டுமென அமீர்கான், ஷாருக்கான் தரப்பினர் கேட்டுள்ளனர்.

வெற்றி நாராயணனுக்கும் செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கவே, கிஷோர் அவர்களை சமாதானப்படுத்தினார். இதனிடையே நேற்று முன்தினம் வெற்றி நாராயணன், கிஷோரை புதுநகருக்கு அழைத்து சென்றார். அங்கு அமீர்கானின் தாயை கிஷோர் அசிங்கமாக திட்டியுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சகோதரர்கள் கத்தியை எடுத்துவந்து கிஷோரை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே கொலையுண்ட கிஷோரின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

The post தாயை பற்றி இழிவாக பேசியதால் ரவுடியை தீர்த்துக்கட்டிய சகோதரர்கள் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puduvai Redyarpalayam ,Aamir Khan ,Puducherry, Redyarpalayam ,Shah Rukh Khan ,
× RELATED தேர்தலின்போது ‘டீப் பேக்’...