×

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அதிமுகவுக்கும் ஓபிஎஸ்சுக்கும் இனி எந்தக்காலத்திலும் தொடர்பில்லை

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து அதிமுகவினர் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: தர்மயுத்தம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் மரண அடி கொடுத்துள்ளது. இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ், அதிமுக உறுப்பினர் என்றும், அதிமுக கரை வேட்டியை கட்டவோ, சின்னம் கொண்ட லெட்டர் பேடுகளை உபயோகிக்கவோ முடியாது. இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ் அதிமுக என்று சொல்ல முடியாது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதிமுக மற்றும் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். இவ்வாறு அவர் கூறினார்.

The post முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அதிமுகவுக்கும் ஓபிஎஸ்சுக்கும் இனி எந்தக்காலத்திலும் தொடர்பில்லை appeared first on Dinakaran.

Tags : Minister ,Jayakumar ,AIADMK ,OPS ,CHENNAI ,Supreme Court ,Madras High Court ,Rayapetta, Chennai ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி