×

அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை: கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பட்டமங்கலம் என்ற இடத்தில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே மோதல் நடந்தது. இதையடுத்து, மோதலில் ஈடுபட்டதாக பெரியகருப்பன் உள்பட 8 திமுகவினர் மீது திருக்கோஷ்டியூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பெரியகருப்பன் சார்பில் வழக்கறிஞர் கே.முத்துராமலிங்கம் ஆஜராகி, சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் மனுதாரர் பெரியகருப்பன் இல்லை. அவருக்கும் அன்று நடந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு நான்கு வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

The post அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags : Minister ,Peryakarapan ,Chennai ,2016 assembly elections ,Dimuka ,Atamangalan ,Tiruppattur Assembly Constituency ,Sivaganga District ,Thirukhoshtyur ,station ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்...