×

புகார் அளிக்க வந்த பெண்களை அடிக்க பாய்ந்த அதிமுக கவுன்சிலரின் கணவர்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது விஜயன்குடி. இங்கு மாவட்ட ஊராட்சி சார்பில் 1கட்டப்பட்ட குளியல் தொட்டி 2 மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. நேற்று காலை அப்பகுதி பெண்கள் குளியல் தொட்டிக்கு சென்றபோது, சிமென்ட் கற்கள் பெயர்ந்து வந்துள்ளது. அதனால் அங்கு குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அதிமுக மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரியை சந்தித்த பெண்கள், புகார் அளித்தனர். அப்போது அங்கிருந்த மகேஸ்வரியின் கணவர் செல்வராஜ், புகார் கூறிய பெண்களை ஆபாசமாக பேசி தாக்க முயன்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post புகார் அளிக்க வந்த பெண்களை அடிக்க பாய்ந்த அதிமுக கவுன்சிலரின் கணவர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Ilayayankudi ,Vijayankudi ,Sivagangai district ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...