×

வீட்டு மனைகள் விற்பதாகக்கூறி ரூ.8.13 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

மதுரை, ஜன. 20: வீட்டு மனை விற்பனை செய்வதாகக்கூறி, முதியவரிடம் ரூ.8.13 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மதுரை, தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் (57). இவர், கடந்த வாரம் நடந்த, போலீஸ் குறைதீர் முகாமில், கமிஷனர் லோகநாதனிடம் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த, 2019ம் ஆண்டு ஜூலை மாதம் திருநகரைச் சேர்ந்த வேல்ராஜ் என்பவர், மேலமடை ஆனந்தன் சர்ச் தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன் என்பவர் வாயிலாக என்னை தொடர்பு கொண்டார்.

அப்போது, வீட்டு மனைகள் விற்பனை தொடர்பாக பேசினார். இதையடுத்து, வேல்ராஜிடம் மதுரை, சிட்டம்பட்டி, ஹரிஹரன் நகரில் உள்ள 170, 171 மற்றும் 197 ஆகிய மூன்று வீட்டு மனைகளை வாங்க, ரூ.8.13 லட்சம் கொடுத்தேன். என்னிடம் இருந்து பணம் வாங்கிய வேல்ராஜ், இடத்தை பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார். இப்புகாரின்பேரில், அண்ணா நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில், வேல்ராஜ் பணம் வாங்கிக்கொண்டு இடத்தை பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றியது உறுதியானது. இதையடுத்து, வேல்ராஜ் மீது மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது.

The post வீட்டு மனைகள் விற்பதாகக்கூறி ரூ.8.13 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dharmaraj ,Dasildar Nagar ,Maruthubandiar Street ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை