கொல்கத்தா: மேற்கு வங்கமாநிலத்தில் இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிடுகிறது. ஆனால் 42 தொகுதிகளில் காங்கிரசிற்கு 2 தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்று திரிணாமுல் கூறுவதால் அங்கு சிக்கல் நிலவுகிறது. இந்தநிலையில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியா கூட்டணியில் உரிய முக்கியத்துவம் தராவிட்டால் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்’ என்று பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன.
The post மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட தயார் மம்தா பரபரப்பு appeared first on Dinakaran.