×

6வது நாளாக தொடரும் நீதிக்கான யாத்திரை.. அசாமில் பிரம்மபுத்ரா நதியில் படகு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி..!!

திஸ்பூர்: 6வது நாளாக தொடரும் ராகுல் காந்தியின் நீதிக்கான யாத்திரை. அசாமில் பிரம்மபுத்ரா நதியில் படகு பயணம் மேற்கொண்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். இதையடுத்து, ராகுலை மீண்டும் நடை பயணம் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கி உள்ளார். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், அசாமில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்கு பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சவாரி செய்தார். ஜோர்ஹட் பகுதியில் இருந்து மஜூலி நோக்கிச் செல்வதற்காக நிமாடி கட் படித்துறையில் இருந்து ராகுல் காந்தி படகில் பயணம் செய்தார்.

The post 6வது நாளாக தொடரும் நீதிக்கான யாத்திரை.. அசாமில் பிரம்மபுத்ரா நதியில் படகு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி..!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Brahmaputra river ,Assam ,Congress ,Kanyakumari ,Kashmir ,Bharatiya Janata Party ,
× RELATED சொல்லிட்டாங்க…