×

அதிமுக மற்றும் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: “அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் இனி எந்த காலத்திலும் தொடர்பில்லை என சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; தர்மயுத்தம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் மரண அடி கொடுத்துள்ளது. இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ், அதிமுக உறுப்பினர் என்றும், அதிமுக கரை வேட்டியை கட்டவோ, சின்னம் கொண்ட லெட்டர் பேடுகளை உபயோகிக்கவோ முடியாது. இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ் அதிமுக என்று சொல்ல முடியாது. எப்போதும் அதிமுக கரை வேட்டி, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாது. இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதிமுக மற்றும் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறினார்.

The post அதிமுக மற்றும் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,AIADMK ,minister ,Jayakumar ,Chennai ,OPS ,Supreme Court ,AIADMK General Assembly ,Madras High Court ,Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...