×

புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

 

புதுக்கோட்டை,ஜன.19: புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (20ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை, ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர்,

செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர், ஆகிய இடங்களில் அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த மின் தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai Chipkot ,Pudukottai ,Chipkot Nagar ,Chipkot Industrial Estate ,Davudu ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...