×

களக்காடு அருகே பாம்பு கடித்து தொழிலாளி சாவு

களக்காடு, ஜன. 19: களக்காடு அருகே பாம்பு கடித்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்ைச பலனின்றி பரிதாபமாக இறந்தார். களக்காடு அருகேயுள்ள மீனவன்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (51). தச்சுத்தொழிலாளியான இவர், கடந்த 15ம்தேதி அப்பகுதியில் உள்ள சந்திரன் என்பவரது தோட்டத்திற்கு சென்று அங்குள்ள ஒரு கல்லை புரட்டினார். அப்போது, கல்லுக்குள் பதுங்கியிருந்த பாம்பு அவரை வலது கையில் கடித்தது. இதையடுத்து மயங்கிவிழுந்த அவரை மீட்ட உறவினர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த களக்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

The post களக்காடு அருகே பாம்பு கடித்து தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Kalakkad ,Mahalingam ,Meenavankulam Main Road ,
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு