×

ஆபாசமாக பேசியவர் கைது

காலாப்பட்டு, ஜன. 19: புதுவை காலாப்பட்டு இசிஆர் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் மது போதையில் அவ்வழியே செல்பவர்களை பார்த்து தரக்குறைவான வார்த்தையால் திட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளார். அங்கு ரோந்தில் ஈடுபட்ட எஸ்ஐ குமார் தலைமையிலான போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர், மரக்காணம் அருகே உள்ள நகரந்தநல்லூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

The post ஆபாசமாக பேசியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalapattu ,Kalapattu ECR Road, Puduwai ,SI Kumar ,Dinakaran ,
× RELATED புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய...