×

தைத்தேர் திருவிழா; ஸ்ரீரங்கத்தில் சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு: நாளை கருட சேவை


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவையொட்டி இன்று காலை நம்பெருமாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடக்கிறது. அதன்படி நேற்று காலை ஒற்றை பிரபையிலும், மாலை ஹம்ச வாகனத்திலும் புறப்பாடு நடந்தது. 3ம் திருநாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலை யாளி வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. நாளை மாலை கருட சேவை நடக்கிறது. 22ம் தேதி நம்பெருமாள் நெல் அளவை கண்டருளுல், 23ம் தேதி வையாளி கண்டருளுல் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 24ம் தேதி காலை நடைபெறுகிறது. 25ம் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. 26ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அன்றுடன் விழா நிறைவடைகிறது.

The post தைத்தேர் திருவிழா; ஸ்ரீரங்கத்தில் சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு: நாளை கருட சேவை appeared first on Dinakaran.

Tags : Thaither Festival ,Simma ,Srirangam ,Trichy ,Srirangam Ranganathar Temple ,Puloka Vaikundam ,Trinchi Srirangam Ranganathar Temple ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...