×

கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும்: தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தின் கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிலும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் ( டிச – 28) காலை உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மரணம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் பேர் இழப்பாக உள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்கள் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தேமுதிக தலைமை கழகம் கூறியுள்ளது.

The post கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும்: தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,DMUDika ,CHENNAI ,DMUDIK ,Coimbatore ,DMDK ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை