×

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டிகளின்போது காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்ததால் இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai District ,District Collector ,Manjuvirattu ,Manchu Virattu ,Manchuvirat ,Sivagangai district ,Pudukottai ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி...