×

செங்குன்றம் அருகே பரிதாபம் பைக் மீது லாரி மோதல்: வாலிபர்கள் 2 பேர் சாவு

புழல்: செங்குன்றம் அருகே பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஒரு வாலிபர் தீவிர சிகிச்சை பெறுகின்றார். சென்னை புழல் அருகே காவாங்கரை கண்ணப்பசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (19). இவர் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்தார். இவரது நண்பர்கள் வசந்த்குமார் (20), கண்ணா (19). இவர்கள் தனியார் கம்பெனியில் பணியாற்றினர். இவர்கள் மூவரும் நள்ளிரவு ஒரே பைக்கில் காவாங்கரை பகுதியில் இருந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சிக்னலில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது செங்குன்றத்தில் இருந்துவேகமாக சென்ற லாரி, அவர்களது பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில், வசந்தகுமார், கார்த்தீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பகுதியில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்துவந்தனர். படுகாயத்துடன் கிடந்த கண்ணாவை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதன்பின்னர் இரண்டு பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post செங்குன்றம் அருகே பரிதாபம் பைக் மீது லாரி மோதல்: வாலிபர்கள் 2 பேர் சாவு appeared first on Dinakaran.

Tags : Karthiswaran ,Kannapasami Nagar ,Kawankari ,Chennai Bughal ,Vyasarbadi ,
× RELATED புழல் காவாங்கரை சந்திப்பில் லாரி...