- மதுரை ரேஸ்கோர்ஸ் அரங்கம்
- காலோ
- இந்தியா இளைஞர் போட்டி
- மதுரை
- மேகநாதரெட்டி
- விளையாட்டு ஆணையம்
- கலோ இந்தியா இளைஞர் விளையாட்ட
- காலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்
- மதுரா
- கலோ இந்தியா
- இளைஞர் போட்டிகளுக்கான மதுரை ரேஸ்கோர்ஸ்
- தின மலர்
மதுரை, ஜன. 14: கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்காக, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்து வரும் நவீனப்படுத்தும் பணிகளை ஜன.16க்குள் முடிக்க வேண்டும் என விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்காக, மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் கேலோ இந்தியா போட்டிக்கான பிரச்சார வாகனத்தை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அவர் வரும் ஜன.19ம் தேதி தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்கிறார். மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுகளான கோகோ மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கட்கா போட்டிகள் ஜன.23, 24 தேதிகளில் நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் திரள உள்ளனர். இதற்காக ரேஸ்கோர்ஸ் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விளையாட்டுப் போட்டிகளுக்காக தற்காலிக ராட்சத உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை ஆய்வு செய்ய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜன.17ம் தேதி மதுரை வருகிறார். இதையடுத்து மைதானத்தில் நடைபெறும் பணிகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெறும் அனைத்து பணிகளையும் ஜன.16ம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார், முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, சீனியர் பயிற்சியாளர் குமரேசன் உள்பட பலர் இருந்தனர்.
The post கேலோ இந்தியா இளையோர் போட்டிகளுக்காக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தை நவீனப்படுத்தும் பணிகள் தீவிரம்: விரைந்து முடிக்க ஆணைய செயலர் உத்தரவு appeared first on Dinakaran.