×

2 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடி,ஜன.14: வங்கக்கடல் பகுதியில் வானிலை சீரானதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களுக்குப் பிறகு நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். வங்க கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து கடந்த 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் வானிலை சீரானதை தொடர்ந்து மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்கச் செல்லலாம் என தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

The post 2 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thoothukudi district ,Bay of Bengal ,Bay of Mannar ,Kumari Sea ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் வீட்டிற்கு வெளியே புதைத்த தாயின் சடலம் தோண்டி எடுப்பு..!!