×

12 புதுகை மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்களில் 3 விசைப்படகுகளில் சென்ற 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகில் இருந்த 1 மீனவர்களை கைது செய்தனர்.

இதில் சங்கர்(35), பாதுஷா(36), குமார்(50), முருகன் (48), சாம்ராஜ் (35), பாலா(34), அஜித்(22), துரை(32), நாகசாமி(51), பாலகிருஷ்ணன் (48), ஜெயராஜ்(55), சாக்சன்(32) ஆகிய 12 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு இரவு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 2024-ம் ஆண்டின் முதல் சம்பவமாக, பொங்கல் பண்டிகைக்கு முன் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post 12 புதுகை மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Pudukottai ,Sri Lankan Navy ,Pudukottai district ,Kottayapatnam ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்