×

பா.வளர்மதியின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ஊழல் வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2001-06-ம் ஆண்டுகளில் நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இதற்கு தடை கேட்டு பா.வளர்மதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் ஆஜரான பா.வளர்மதி தரப்பு வழக்கறிஞர், பா.வளர்மதி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்து நிராகரித்த நீதிபதிகள், ‘முடிந்தால் இம்மாத இறுதியில் விசாரிக்க முயற்சிக்கிறோம்’ என தெரிவித்தனர்.

The post பா.வளர்மதியின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,B. Valarmathi ,New Delhi ,AIADMK ,minister ,P. Valarmathi ,ADMK ,Tamil Nadu ,Minister of Social Welfare ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு