×

ஒன்றிய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: ஒன்றிய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறை குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம் சென்னை அசோக் நகரில் இயங்கி வருகிறது. வெளிநாடுகளுக்கு சமையல் வேலைக்கு ஆட்களை அனுப்ப, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இங்கு அனுமதி பெற வேண்டும். கடந்த 2007-2009ல் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக பணிபுரிந்த வருவாய் பணி அதிகாரி ஆர்.சேகர், குடியுரிமை சான்றுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும், அதை சொத்துக்கள் வாங்க பயன்படுத்தியதாகவும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனசேகரன், ஆர்.சேகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

The post ஒன்றிய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Union Government ,Overseas Indians Welfare Department Citizenship Protection Office ,Ashok Nagar, Chennai ,Dinakaran ,
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...