×

திருமருகல் அருகே ஆழ்துளை கிணற்றில் லாரி, டிராக்டர்களில் குடிநீர் எடுக்க தடை

 

நாகப்பட்டினம், ஜன.13: திருமருகல் அருகே ஆழ்துளை கிணறுகளில் டேங்கர் லாரி மற்றும் டிராக்டர் வழியாக குடிநீர் எடுக்க வட்டார வளர்ச்சி அதிகாரி ஜவகர் தடை விதித்துள்ளார். திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தமசோழபுரம் ஊராட்சி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுத்து டேங்கர் லாரி மூலம் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அப்பகுதில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். இது குறித்து கலெக்டரின் பரிந்துரையின்பேரில், திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் இப்பகுதியில் பொதுமக்களின் புகாரின் அடிப்படையிலும், நீர்வளத்தை கருத்தில் கொண்டு டேங்கர் லாரி வழியாக குடிநீர் எடுக்க வழங்கப்பட்ட அனுமதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிடப்பட்டது.

The post திருமருகல் அருகே ஆழ்துளை கிணற்றில் லாரி, டிராக்டர்களில் குடிநீர் எடுக்க தடை appeared first on Dinakaran.

Tags : Thirumarukal ,Nagapattinam ,District Development Officer ,Jawakar ,Uttamasholapuram ,Dinakaran ,
× RELATED பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா