×

மது விற்ற 5 பேர் கைது

ஈரோடு, ஜன.13: பவானி ஆப்பக்கூடல் அடுத்துள்ள ஒரிச்சேரிபுதூரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் முட்புதரில் மறைத்து வைத்து மதுவிற்பனை செய்து கொண்டிருந்த ஒரிச்சேரிபுதூர், மேற்கு காலனியை சேர்ந்த காளியப்பன் (56) என்பவரை கைது செய்தனர். இதே போல சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக கார்த்திகேயன் (35), பெரியசாமி (39), முத்துவேல் (51), துரைசாமி (52) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Appakodal police ,Oricherryputhur ,Bhawani Appakodal ,West Colony ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது