×

வரும் 23ம் தேதி வரை பஸ் பாஸ் பெற கால அவகாசம்: மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை, ஜன.13: மாதாந்திர சலுகை, மாணவர் சலுகை பயண அட்டையை வரும் 23ம் தேதி வரை பெறலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்து கழகத்தில், 2024 ஜன.16ம் தேதி முதல் பிப்.15ம் தேதி வரையிலான செல்லத்தக்க விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை மாதம்தோறும் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையும், ஜன.11ம் தேதி முதல் பிப்.10ம் தேதி வரையிலான செல்லத்தக்க 50சதவீத மாணவர் சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை அனைத்து மாநகர் போக்குவரத்து கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 17ம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன் கருதி இந்த முறை மாதாந்திர சலுகை, மாணவர் சலுகை பயண அட்டை மற்றும் ரூ.1000 பயண அட்டையின் விற்பனை வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி அனைத்து மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளலாம்.

The post வரும் 23ம் தேதி வரை பஸ் பாஸ் பெற கால அவகாசம்: மாநகர் போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : City Transport Corporation ,Chennai ,MTC ,Municipal Transport Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...