- மணிப்பூர்
- உடல் மீட்பு காங்கிர
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
- பாஜக
- சூரச்சந்த்பூர்
- விஷ்ணுபூர் மாவட்டம்
- முண்டினம்
- சுரசந்த்பூர் மாவட்டம்
- ஹோடக் பைலான்
சுராசந்த்பூர்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், அருகில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் விறகு சேகரிக்க நேற்று முன்தினம் சென்றனர். அவர்கள் நால்வரும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சுராசந்த்பூரின் ஹாடக் பைலன் பகுதியில் காணாமல் சென்ற 4 பேரில் 3 பேர் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. அவர்களில் இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20), ரோமென் சிங் (38) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான மற்றொரு நபரான தாரா சிங் என்ற நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட 3 பேரும் ஆயுதமேந்திய குழுக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் இரு குழுக்களுக்கும் இடையே மீண்டும் வன்முறை நடைபெற்று வருகிறது. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘மணிப்பூருக்கு அருகில் இருக்கும் இட்டா நகருக்கு வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து ஏன் பேசவில்லை? அமைதியாக ஏன் இருக்கிறீர்கள்? பாஜகவின் தலைவராக இருக்கும் அவர், மணிப்பூர் வன்முறை பற்றி ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியை பற்றி பேசாமல் அவர்களால் தூங்க முடியாது’ என்றார்.
The post மணிப்பூரில் விறகு சேகரிக்க சென்ற 3 பேர் சடலம் மீட்பு காங்கிரஸ் குறித்து பேசாமல் அவர்களால் தூங்க முடியாது!: பாஜகவை விளாசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி appeared first on Dinakaran.