×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜன.22 வரை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் அது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜாமீன் மனுவில், நான் ஒரு அப்பாவி. சட்டத்தை மதித்து நடப்பவன். ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடப்பேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன். எனவே ஜாமீன் வழங்க வேண்டுமென உருக்கமாக கோரியுள்ளார். இந்த மனு மீது அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நினைவுகூரத்தக்கது

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜி 3-வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Chennai Primary Sessions Court ,Jamin ,Minister ,Sendil Balaji ,Chennai ,Sentil Balaji ,Judge ,S. Allie ,Senthil Balaji ,
× RELATED கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை