×

அனுமன் ஜெயந்தி விழா

 

ஜெயங்கொண்டம், ஜன.12: உடையார்பாளையம் வேலப்பன் செட்டியார் ஏரிக்கரை தென்புறம் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள பஞ்ச முக ஆஞ்சநேயர் சுவாமிக்கு நடைபெற்றுவரும் மார்கழி மாத உத்சவத்தோடு, நேற்று காலை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, மாலை 4 மணி முதல் வெண்ணெய் காப்பு சாற்றி அலங்காரம் செய்யப்பட்டது. 6 மணியளவில் மகா தீபாராதனை மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்பிரகார ஊர்வலமும் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post அனுமன் ஜெயந்தி விழா appeared first on Dinakaran.

Tags : Hanuman Jayanti Festival Jayangondam ,Varadaraja Perumal temple ,Vodiyarpalayam Velappan Chettiar lake ,Margazhi month festival ,Pancha Mukha Anjaneyar ,Swami ,Anjaneyar ,Hanuman Jayanti Festival ,
× RELATED ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள்...