×

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பணியாளர்களுக்கு இலவச சீருடைகள்

திருத்தணி, ஜன. 12: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலுடன் 30 திருக்கோயில்கள் இணைந்துள்ளன. இங்கு, பணிபுரியும் பணியாளர்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசை பணியாளர்கள் உள்பட 210 நபர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இலவச சீருடைகள் மற்றும் காலண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்கோயில் பணியாளர்கள் 210 நபர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இலவச சீருடைகள் மற்றும் காலண்டர்களை வழங்கினர்.

The post இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பணியாளர்களுக்கு இலவச சீருடைகள் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Charities Department ,Tiruthani ,Subramania ,Swamy ,Subramanya Swamy ,Dinakaran ,
× RELATED ₹14.31 லட்சம் காணிக்கை