- ED
- ஃபரூக் அப்துல்லா
- ஸ்ரீநகர்
- முன்னாள் முதல்வர்
- அமலாக்க
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம்
- தின மலர்
ஸ்ரீநகர்: அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆஜராகவில்லை. முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா(86), ஜம்ம காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். அப்போது,கிரிக்கெட் சங்கத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 2018ல் அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 11ம் தேதி(நேற்று) ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
The post ஈடி சம்மன்: பரூக் அப்துல்லா ஆஜராகவில்லை appeared first on Dinakaran.