×

வெள்ளிச்சந்தை அருகே விபத்து தொழிலாளி படுகாயம்

குளச்சல், ஜன. 12: வெள்ளிச்சந்தை அருகே பைக் விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். வெள்ளிச்சந்தை அருகே சாந்தபுரத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் அகிலன்(21). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் (26) என்பவர் தனது பைக்கை மேலசங்கரன்குழி – பேயோடு சாலையில் ஓட்டிச்சென்றார். பின்னால் அகிலன் அமர்ந்திருந்தார். பைக் சாந்தபுரம் பகுதியில் செல்லும் போது முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்தி செல்ல அபினேஷ் முயன்றார். அப்போது எதிரே வந்த டெம்போ அபினேஷ் பைக் மீது மோதியது. இதில் அபினேஷ் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அந்த பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அகிலன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அபினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெள்ளிச்சந்தை அருகே விபத்து தொழிலாளி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Vellichandi ,Kulachal ,Sivalingam ,Santapuram ,Akhilan ,Abinesh ,Melasankarankuzhi ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது