×

திங்கள்சந்தை: முன்னாள் ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திங்கள்சந்தை: இரணியலில் திங்கள்நகர் பேரூராட்சி முன்னாள் ஊழியர் குமாரதாஸ் (47) வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. 2018-2022 காலகட்டத்தில் பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.35 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. குமாரதாஸ் மற்றும் அவரது மனைவி சுஜாதா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமாரதாஸுக்கு சொந்தமான 2 வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

The post திங்கள்சந்தை: முன்னாள் ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Tingalshandi ,Kumaradas ,Tingalnagar Municipality ,Iranial ,Sujata… ,Dinakaran ,
× RELATED கருங்கல் அருகே கஞ்சா போதையில் பைக்கில் இருந்து குதித்த மாணவர் காயம்