×

துணைவேந்தர்கள் தேர்வு தேடுதல் குழுக்களை ஆளுநர் திரும்ப பெற்றதற்கு வரவேற்பு: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் 10ம் வீதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.1000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை நேற்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுதான், துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்கின்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் அறிவித்துள்ளார். இது தமிழ்நாடு அரசு எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டிற்கு கிடைத்திருக்க கூடிய வெற்றி என்று கூறுவதோடு, ஆளுநருடன் சண்டையிட தயாராக இல்லை. தமிழ்நாடு அரசு எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டிற்கு ஆளுநர் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா, சொந்த காரணம் என்று கூறியுள்ளார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என மற்ற விவரங்கள் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post துணைவேந்தர்கள் தேர்வு தேடுதல் குழுக்களை ஆளுநர் திரும்ப பெற்றதற்கு வரவேற்பு: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Vice-Chancellors Selection Committees ,Minister ,Raghupathi ,Pudukottai ,Tamil Nadu ,Law ,Vice ,Chancellors of ,Dinakaran ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...