×

பில்கிஸ்பானு வழக்கின் தீர்ப்புக்கு எடப்பாடி வரவேற்பு

சென்னை: குஜராத்தில் பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை முன் கூட்டியே விடுதலை செய்ததை ரத்து செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதவில், ‘2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது என்று கூறியுள்ளார்.

The post பில்கிஸ்பானு வழக்கின் தீர்ப்புக்கு எடப்பாடி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Bilgispanu ,CHENNAI ,AIADMK ,General Secretary ,Edappadi Palanichamy ,Supreme Court ,Bilgis Banu ,Gujarat ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்