×

கல்வி, வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது: ஐகோர்ட் யோசனை

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் மனு தாக்கல் செய்திருந்தார். அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 4-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

 

The post கல்வி, வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது: ஐகோர்ட் யோசனை appeared first on Dinakaran.

Tags : ICOURT ,CHENNAI ,Madras High Court ,Supreme Court ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...