×

கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள அதிமுக சார்பில் தனிக்குழு அமைப்பு: எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

சென்னை: கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள அதிமுக தனிக்குழு அமைத்துள்ளது. தனிக்குழுவை அமைத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு அளித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி திருப்திகரமாக இல்லாததால், அதனை ஒருங்கிணைத்து அமைக்க தனிக்குழு அமைத்துள்ளார். இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையை கட்சிகள் தொடங்க உள்ளன. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவிற்கும் பாஜவிற்கும் இடையேயான உறவு முழுவதுமாக முறிந்து விட்டது. எந்தவித ஒட்டும் உறவும் இல்லை என்று வெளிப்படையாகவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் மெகா கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி கூறி வருகிறார்.

கடந்த 26ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘அதிமுக உயிரோட்டம் உள்ள கட்சி. எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்கவோ முடக்கவோ முடியவில்லை என்று ஆவேசமாக பேசினார். கூட்டம் முடிந்த அடுத்த சில நாட்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிஅளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள அதிமுக சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள அதிமுக தனிக்குழு அமைத்துள்ளது. தனிக்குழுவை அமைத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு அளித்துள்ளார்.

The post கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள அதிமுக சார்பில் தனிக்குழு அமைப்பு: எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Eadapadi Palanichami ,Booth Committee ,Kolathur ,Supreme Court ,Chennai ,Secretary General ,Edappadi Palanisami ,Dinakaran ,
× RELATED பா.ம.க.வில் பூத் கமிட்டிக்கு கூட ஆட்கள் இல்லை – செல்லூர் ராஜு