×

பாலாறு, பொருந்தலாறு, சண்முகநதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

திண்டுக்கல்: பாலாறு, பொருந்தலாறு, சண்முகநதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து சண்முகநதியில் 1000 கனஅடி உபரிநீர் திறப்பால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மானூர், கோரிக்கடவு, கீரனூர் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்க்க ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலாறு, பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 64.24 அடியாக உயர்ந்துள்ளது.

The post பாலாறு, பொருந்தலாறு, சண்முகநதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Palaru ,Patalaru ,Shanmuknadi river ,Dindigul ,Shanmuganadi ,Balaru ,Bhalalar dam ,Manur ,Korikadau ,Keeranur ,
× RELATED புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்