- கம்யூனிஸ்ட்
- யூனியன் அரசு
- அரியலூர்
- இந்திய கம்யூனிஸ்ட்
- மிக்ஜாம்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
அரியலூர்,ஜன.9: மழை, வெள்ளம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி அரியலூர் அஞ்சல் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களையும், பெருமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களையும் இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலர் தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராமநாதன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலர் கலியபெருமாள், மாவட்ட பொருளாளர் தேவசகாயம், மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுமுகம், கட்டுமான தொழிற்ச் சங்க மாவட்ட செயலர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
The post அரியலூரில் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.