×

அனுமதியின்றி மஞ்சு விரட்டு 110 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, ஜன.9: சூளகிரி அடுத்த பீர்ப்பள்ளி கிராமத்தில், பொங்கல் விழாவையொட்டி நேற்று காலை அரசு அனுமதியில்லாமல் மஞ்சு விரட்டு நடந்தது. இந்த நிலையில், மஞ்சு விரட்டின் போது ஏனுசோனை கிராமத்தை சேர்ந்த தர்(19), பி.ஜே.துர்க்கம் கிராமத்தை சேர்ந்த யோகேஸ்வரன்(17) ஆகியோர் காளை முட்டியதில் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற சூளகிரி போலீசார், அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சு விரட்டை தடுத்து நிறுத்தினர். பின்னர், இதுபற்றி மேலுமலை கிராம நிர்வாக அலுவலர் ராமர் கொடுத்த புகாரின் பேரில், ஊர் தலைவர் குமரேசன் உள்பட 110பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அனுமதியின்றி மஞ்சு விரட்டு 110 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Manju ,Krishnagiri ,Birpalli village ,Choolagiri ,Pongal festival ,dhar ,Enusonai village ,Yogeswaran ,PJ Durgam village ,Manchu ,Manchu eviction ,Dinakaran ,
× RELATED மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு