×

கனரக வாகனங்களில் சிக்கி மின்கம்பிகள் சேதம்

போச்சம்பள்ளி, ஜன.9: போச்சம்பள்ளி அருகே, ஒலப்பட்டி பகுதியில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கம்பெனிகளுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கனரக வாகனங்கள் ராட்சத மிஷின்களை ஏற்றி வருவதால் அப்பகுதியில் உள்ள மின்கம்பிகள் மீது பட்டு, மின் ஒயர்கள் அறுந்தும் பழுதடைந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு செல்லும் மின்சாரம் தடைபட்டு வருவது வழக்கமாக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு, கொடமாண்டப்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் லாரிகளில் அதிகளவில் பாரம் ஏற்றப்படுவதால், மின் கம்பிகள் மீது உரசும் சமயத்தில் ஒயர்கள் பழுதடைந்தும், அறுந்தும் விழுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள குடிருப்பு மற்றும் விவசாயத்திற்கு செல்லும் மின்சாரம் தடைபட்டு இன்னலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இப்பகுதியில் செல்லும் மின் கம்பிகளை மாற்றி உயரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

The post கனரக வாகனங்களில் சிக்கி மின்கம்பிகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Olapatti ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி ஜி.ஹெச் அருகே விவசாய...