×

பைக்கில் வீட்டுக்கு எடுத்துச்சென்ற கன்று குட்டிக்காக 3 கி.மீ ஓடிய எருமை: நெகிழச்செய்த தாய்ப்பாசம்

பூந்தமல்லி: போரூரைச் சேர்ந்தவர் பிரசாந்த் மோகன். இவர், மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று, இவர் தனது மாடுகளை அதே பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அதில் ஒரு எருமை மாடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் கன்று குட்டி ஈன்றது. இதையடுத்து, பிரசாந்த் மோகன், உறவினரை பைக்கில் அங்கு வரவழைத்து, கன்றுக்குட்டியை பைக்கில் வைத்து வீட்டிற்கு எடுத்து சென்றார். தனது கன்றுக்குட்டியை உரிமையாளர் எடுத்து செல்வதை பார்த்த எருமை மாடு, பைக்கின் பின்னால் கன்று குட்டியை ஏக்கத்தோடு பார்த்தபடி ஓடிவந்தது. வேகமாக செல்லும் இடங்களில் வேகமாகவும், மெதுவாக செல்லும் இடங்களில் மெதுவாகவும் தனது கன்றுக்குட்டியை தொடர்ந்து எருமை மாடும் சாலையில் ஓடி வந்தது. இதனை அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து செல்போனில் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் உண்டு என்பதை உணர்த்தும் வகையில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம்  இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.    …

The post பைக்கில் வீட்டுக்கு எடுத்துச்சென்ற கன்று குட்டிக்காக 3 கி.மீ ஓடிய எருமை: நெகிழச்செய்த தாய்ப்பாசம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Prashant Mohan ,Porur ,Buffalo ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ