- எருதுகள்
- ஸ்டம்புகளை
- ஜல்லிக்கட்டு
- மதுரா
- மதுரை
- அமைச்சர்
- மூர்த்தி
- மதுரை அஞ்யபுரம், ஆலங்கநல்லூர்
- பாலமேடு
- ஸ்டம்பல்பேக்ஸ்
- தின மலர்
மதுரை: மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு டிச.10, 11-ல் முன்பதிவு நடைபெறும் என மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. madurai.nic.in இணையதளத்தில் காளைகள், மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளன.
பொங்கல் திருநாளையொட்டி மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை ஆகும். இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும், போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒரு ஊரில் விளையாடும் மாடும், வீரர்களும் வேறு ஊர்களில் விளையாட அனுமதி அளிக்கப்படாது. ஒரு மாட்டிற்கு தகுதி சான்றிதழ் பெற்று வேறு வேறு நபர்களின் ஆதார் மூலம் முன்பதிவு செய்ய கூடாது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முறைகேடுகளை தடுக்க QR code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், வரும் ஜனவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் madurai.nic.in என்ற இணையதளத்தில் காலையில் மற்றும் மாடு கொடி வீரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
The post மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு டிச.10, 11-ல் முன்பதிவு appeared first on Dinakaran.