×

பொங்கல் பண்டிகையையொட்டி 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு மட்டுமின்றி கிளம்பாக்கத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை முடிந்து வரும் மக்களுக்கு 17,589 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

The post பொங்கல் பண்டிகையையொட்டி 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pongal ,Minister ,Shivashankar ,Transport Minister ,Sivashankar ,Pongal festival ,Madhavaram, Thambaram ,Sivasankar ,
× RELATED மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்...