×

ராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

 

ராஜபாளையம், ஜன. 8: ராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம், மகளிர் பாதுகாப்பு மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை டி.எஸ்.பி ப்ரீத்தி துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு, தலைக் கவசம் அணிவதன் அவசியம், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட காவல் துறையினர், ஊர்காவல் படையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். மதுரை சாலையில் உள்ள நேரு சிலை எதிரே இருந்து புறப்பட்ட பேரணியை, டிஎஸ்பி. ப்ரீத்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், தென்காசி சாலை, காந்தி சிலை உள்ளிட்ட நகரின் மைய பகுதிகள் வழியாக வந்து, சொக்கர் கோயில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரே நிறைவடைந்தது. அங்கு பள்ளி மாணவ மாணவிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை காவல் துறையினர், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டு களித்தனர்.

The post ராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : safety awareness ,Rajapalayam ,DSP ,Preethi ,Traffic Police Department ,Rajapalayam, Virudhunagar District ,Road Safety Awareness Rally in Rajapalayam ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்