×

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்து நாசம் அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர் செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு, ஜன. 7: செய்யாறு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர். வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பகுதி சேர்ந்தவர் குருகார்த்தி(25), இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு செய்யாறு அருகே ஞானமுருகன் பூண்டியில் உள்ள பெண் உறவினர்களை ஐயப்ப சாமி பூஜைக்காக வேலூருக்கு காரில் அழைத்துச் சென்றார். அப்போது செய்யாறு- ஆரணி சாலை வழியாக சென்றபோது பெரும்பள்ளம் கிராமம் தனியார் பள்ளி எதிரில் திடீரென காரின் முன் பக்கத்தில் புகை வருவதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காரை நிறுத்தினார்கள். உடனே காரை ஓட்டிய குரு கார்த்தி இறங்கி பார்த்தபோது முன்பக்கத்தில் அதிக அளவு புகை வந்தது. உடனடியாக காரில் இருந்த உறவினர் பெண்களை கீழே இறக்கினார். அப்போது திடீரென கார் தீப்பிடித்தது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செய்யாறு தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். செய்யாறு தீயணைப்பு நிலை அலுவலர் மனோகரன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரிந்து நாசமானது. பின்னர் கார் எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 5 பெண்கள் உட்பட 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்து நாசம் அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர் செய்யாறு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Seiyaru ,Kurukarthi ,Vellore ,Katsamparai ,Chennai ,Dinakaran ,
× RELATED உலக மலேரியா தின விழிப்புணர்வு...