- முதல் அமைச்சர்
- அஇஅதிமுக
- உளுந்தூர்பேட்டை
- எலவனாசூர்கோட்டை
- உலுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்
- பகிரி
- குமார் மகன் திவாகர்
- தின மலர்
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை கிராமத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கொண்ட வாட்ஸ் அப் குழு ஒன்று உள்ளது. இந்த குழுவில் இதே பகுதி சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் குமார் மகன் திவாகர்(43) என்பவர், தமிழ்நாடு முதல்வர், விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு செய்தார். இதுதொடர்பாக எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில், ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் திவாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.
The post முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு கருத்து: அதிமுக செயலாளர் கைது appeared first on Dinakaran.